Monday, 20 July 2015

இந்தா வரம் இந்தா வரம் அது தான் தாவரம் !!


வரம் தா வரம் தா  என்று கேட்கும் போது

எவ்வளவு சாப்பிடுவது    என்ன சாப்பிடுவது      எதை சாப்பிடுவது 
   எப்படி சாப்பிடுவது        எப்ப சாப்பிடுவது       எங்கே சாப்பிடுவது


ஆண்களுக்கு முகத்தில் முடி (மிசை, தாடி) முளைக்காமல் இருக்கும் நபர்கள் போதுவாக குண்டாக  கருப்பாக இருப்பார்கள். இவர்களுக்கு ஹார்மோன் சுரப்பதில் பிரச்சனை உள்ளது.


நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இறைவனிடம் சென்று வரம் தா, வரம் தா என்று கேட்டு பெறுவதைவிட நாம் கேட்கும் முன்பாக இறைவன் கொடுத்த அந்த வரத்தை பயன்படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கலாம். இறைவன் இந்தா வரம் இந்தா வரம் என்று  கொடுத்ததை சரியாக பார்த்தால் தாவரம் என்று வரும் அந்த தாரவங்களில் இருந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டால் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

சாப்பிடும் முறையில் நாக்கை வெளியே நீட்டி சாப்பிட கூடாது ஸ்பூன் கொண்டு சாப்பிடுவது போல் கைகளில் எடுத்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் உணவு முழுமையாக சுவைஅறிய முடியும். சாப்பிடு போது ஆள் கட்டி விரலை நீட்டிகொண்டு சாப்பிடுவார்கள் அதுவும் தவறு.

  ஆள்காட்டி விரல் நீட்டி சாப்பிட்டால் உணவு சரியாக ஜீரணம் ஆகாது,. காரணம் ஆள் காட்டி விரல் நுனியில் பெருங்குடல் முக்கிய மான அக்குபஞ்சர் புள்ளி உள்ளது. ஜீரணம் நன்கு நடைபெற்று பெருங்குடல் கழிவுகளை விரைவில் வெளியெ அனுப்பும்..சாப்பிடும் போது உதட்டை ஒட்டியபடி சாப்பிடவேண்டும். குழந்தைகள் சப்பி சப்பி சாப்பிட்டான் சாப்பாடு நல்லா உணத்தியாக இருக்கிறது போல் என்று சொல்வர்கள்.

No comments:

Post a Comment