Saturday 6 June 2015

எமனே வராதே போ போ

  எமனும் வர அஞ்சுவான்.


உண்பதிரு பொதொழிய மூன்றுபொழுதுண்ணோம்

உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்

பெண்ணுறவுதிங்களொருக்காலன்றிமருவோம்

பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீர் அருந்தோம்

மண்பாவுகிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்

வாழையினம் புஞ்சொழீய காயருந்தல் செயோம்

நண்புபெற உண்டபின்பு குறுநடையும் பயிவோம்

நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்க மிடத்தே

ஒரு நாளைக்கு இரண்டு பொழுது மட்டும் உண்போம் 
.இரவில் நன்றாக தூங்குவோம். பகலில் தூங்கமாட்டோம்,
பெண்ணின் பால் உடலுறவை மாதம் ஒரு முறை மட்டும் வைத்துகொள்வோம், உணவுண்ணும் போது தாகம் அதிகம் இருப்பினும் இடையீடயே நீர் அருந்த மாட்டோம்,
வாழைக்காயில் பிஞ்சுக்காய்களையே கறி சமைத்து உண்ணுவோம், முற்றிய காய்களை கறி  சமைத்து உண்ணமாட்டோம்,
உண்டவுடன் சிறிது தூரம் நடத்தலாகிய பயிற்சியைச் செய்வோம்,
இவ்வாறு நாம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்க கலங்குவான் நீண்ட ஆயுளை பெற்று வாழ்வோம்

No comments:

Post a Comment