Wednesday 30 January 2019


பகுதி 12
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

தலை வலி போன கதை:
ஒருவர் தன் 34 வயது பூங்கொடி (பெயர் மாற்றம்) என்ற பெண்ணை  அழைத்து கொண்டு வந்து தன் மனைவிக்கு கடந்த 71/2 வருடங்களாக கடுமையான தலைவலி  என்றும்   36 மருத்துவர்களிடம் காட்டியும், மற்றும் கோவையில்  மிகபெரிய  மருத்துவமனையிலும்,  பார்த்தும்  குணமாகவில்லை  என்றும் தினசரி மாத்திரை மருந்து  சாப்பிட்டும் ஒரு பயனும் இல்லை தொடர்ந்து தலைவலி இருந்துவந்தது  தினசரி மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததால் வயிறும் கெட்டு போய்  அடிக்கடி வயிற்றுகெடுப்பு  ஏற்பட்டு அதனால்  அந்த  பெண்  மிகமெலிந்த    மெல்லிய தோற்றத்துடன் , அழைத்து வந்தார்.. தினமும் மாத்திரை சாப்பிட்டால் தான் தலைவலி நிற்கும் இல்லை என்றால் தொடர்ந்து தலை வலிக்கும், அதனால் இரவில் தூங்க முடியவில்லை என்றும், கூறினார். அந்த பெண் 34 வயதில் 30 கி.கி எடை இருந்தார்கள். பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது...
முதலில் மாத்திரை மருந்து இல்லாமல்  அக்குபஞ்சர் சிகிச்சை கொடுத்த போது 1 வாரம் வரையில் நன்றாக இருப்பதாகவும்,  பிறகு  தலைவலி தொடர்ந்து  வருவதாகவும் மீண்டும், மீண்டும் வாரம் ஒரு முறை  தொடர்ந்து வந்தார்.  என்னிடம்  மருத்துவம் பார்த்ததிலேயே அதிகமாக சிகிச்சைக்கு வந்தது  அந்த  பெண்ணாகத்தான் இருக்கும். சுமார் 25  தடவைக்கு மேல் சிகிச்சைக்காக வந்துள்ளார்.  பிறகு  நான்  அந்த பெண்ணிடம்  ஒரு முறை சிகிச்சைக்காக வந்த போது  உனக்கு தலையில் தலைவலி  இல்லை ஆனால்  தலைவலி  இருப்பது போல்  உனக்கு மனதில் தான்  நோய் உள்ளது .என்றும், சொல்லி  உனக்கு உடலில் நோய் இல்லை  ஆனால்  மனதில் நோய் உள்ளது.   அதற்கு  உங்களுக்கு ஹிப்னாடிசம்  சிகிச்சை  செய்ய வேண்டும். என்று சொல்லி அடுத்த   நாள் சிகிச்சைக்காக  தயாராக வரசொல்லி அனுப்பிவைத்தேன்..
அடுத்தநாள் அந்த பெண்ணுக்கு ஹிப்னாடிச சிகிச்சை செய்தபோது  ஆழ்மனதில் உள்ள  பதிவுகள் பற்றி கேட்டபோது அந்த பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்த பிறகு  இனி  நமக்கு குழந்தை பிறக்காது என்று  ஆழ்மனதில் பதிந்து விட்டது. அதனால் இந்த குழந்தையை நன்கு பாதுகாத்து வளர்க்க வேண்டும்  அந்த பையனுக்கு எதுவும் ஆகாமல் பத்திரமாக வளர்க்க வேண்டும் என்று மனதில் ஏற்பட்ட ஆழமானபயம் தான் தலைவலிக்கு காரணம், என்று கண்டுபிடித்து அதற்கு தக்கவாறு ஆழ்மனதில் தேவையான பதிவுகளை பதிவுசெய்து சிகிச்சை அளித்தேன்.. உங்களுக்கு தலைவலி இல்லை ஆனால் தலைவலி இருப்பது போல் நினைக்கின்றீர்கள் அதனால் உங்களுக்கு தலைவலி வருகின்றது. இனி உங்களுக்கு வாழ்க்கை முழுவதும் தலைவலி வராது அது இல்லை என்று ஆழ்மனதுக்கு சரியான பரிந்துரை செய்தபிறகு அந்த பெண்னுக்கு தலைவலி போய்விட்டது. சுமார் இரண்டுவருடங்களாக அவருக்கு ஒருநாள் கூட தலைவலி வரவில்லை நல்லஆரோக்கியமாக உள்ளார்.  மேலும் அந்த பெண்ணின் தலைவலிக்கான காரணம் அறிந்து கொள்ளவேண்டி  அந்த பெண்ணை ஆழ்ந்ததூக்க நிலையில் முன்ஜென்ம நிகழ்வுகளுக்கு கொண்டு சென்ற போது போன ஜென்மத்தில் பெண்ணாக பிறந்ததாகவும் தனக்கு திருமணம் நடந்ததாகவும்  ஆனால் திருமணம், ஆகி  கடைசிவரை குழந்தை இல்லாமல் மனது கடுமையாக பாதிக்கபட்டு தேம்பிதேம்பி அழுதார்  (வீடியோ ஆதாரம் உள்ளது). பிறகு தன் கணவர் இறந்துவிட்டதாகவும் அப்போது மனம் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும். அதன் பிறகு நீண்ட வருடங்கள் வாழ்ந்து பாட்டியாக இறந்ததாக சொன்னார்.     
அதற்கு  முன்ஜென்மத்தில் அந்த பெண் ஒரு விவசாயி வீட்டில் மகளாக பிறந்து ஒல்லியாக அழகாக இருப்பதாகவும், தான் பாவாடை தாவணி போட்டு இருப்பாதாகவும் சொன்னார். தனக்கு கடைசி வரை திருமணம் ஆகாமல் 90 வயது முதிர்ந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து இறந்ததாக தெரிவித்தார்.. அப்போது அந்த நிகழ்வும் அவர் மனதை பாதித்து மிகவும்   தேம்பிதேம்பி கண்ணீர் விட்டு அழுதார் . இதற்கு சிகிச்சையாக அவர் ஆழ்மனதிற்கு ஆறுதல் சொல்லி அந்த கெட்ட பதிவுகளை அழித்து விட்டு இப்போது இந்த ஜென்மத்தில் அதாவது இந்த வாழும் ஜென்மத்தில்  உனக்கு திருமணம் ஆகிவிட்டது, நல்ல கணவர் அமைந்து விட்டார், அத்துடன் குழந்தையும் பிறந்து விட்டது, சந்தோஸமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.  இந்த குழந்தையை நன்கு அன்பாக கவனித்து வளர்த்து பெரியவன் ஆக்கி நன்கு படிக்க வைக்க வேண்டும் அடுத்த ஜென்மத்தில் மேலும் சில குழந்தைகள் பிறந்து நீங்கள் சந்தோஷமாக வாழ்வீர்கள் என்று ஆழ்மனதிற்கு பரிந்துரை சிகிச்சைகொடுத்தேன்   இன்று அவர் நலமாக உள்ளார். 30 நிமிட சிகிச்சையில்  அவரது 71/2 வருட தலைவலி போய் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றார்.   அன்று முதல் இன்று வரை  அவருக்கு தலைவலி இல்லாமல் சுகமாக உள்ளார். உடல் எடையும் சுமார் 10 கி.கி வரை அதிகமாகிவிட்டது  நன்றாக  சந்தோஸமாக இருந்து கொண்டு உள்ளார்.

No comments:

Post a Comment