Wednesday 30 January 2019




பகுதி 7 

”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

மனநோய் அறிகுறிகள்  !!

நான் மற்றவகள் போல் சாதாரணமானவன் இல்லை, கடவுளின் அவதாரம், கடவுளிடம் பேசுவேன்,  சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். எந்த வேலையிலும் ஆர்வம் இல்லை,  காலையில் எழுந்ததும் சோர்வு அதிகமாக இருக்கா,  ஏண்டா காலை விடிந்தது என்று இருக்கா,  மனதில் பயமா இருக்கா, யாரிடமும் பேச முடியாமல் தாழ்வுமனப்பாண்மையாக  இருக்கா, என் காதில் யாரோ அசிங்கமாக திட்டுகிறார்கள், நீ செத்துபோ என்று சொல்கிறார்கள், என்பது எனக்கு என்ன பன்றது என்று தெரியவில்லை,

பயமா இருக்கா, என்னை வான் வழியாக, செல்போன் வழியாக, வேவு பார்க்கிறார்கள் சாட்டிலைட் மூலமாக வேவி




பார்க்கிறார்கள். என் உடம்பில் உள்ள உறுப்புகளை கண்ட்ரோல் செய்கிறார்கள். போன வாரம் இதயத்தில் அட்டாக் வர செய்துவிட்டார்கள்.
இரவு முழுவது பேய் வந்து இரவில் என்னோடு படுக்குது. காலையில் கை. கால் வலிக்குது, என்னை மயக்கி எங்கோ எழுத்துட்டு போகுது, காலையில் கொண்டு வந்து விடுது, ஆவிகளுடன் பேசுவேன் எனக்கு ஆவி நண்பர்கள் உண்டு, நடக்க போவதை நான் முன்பே சொல்லிவிடுவேன், ஆவிகள் இரவில் என் மீது நெஞ்சு மீது அமர்ந்து கொண்டு பேசுகிறது, அது யாரோ அனுப்பிய ஆவிகள்.

செக்ஸ் சம்பந்தமான காட்சிகள், திருட்டு தனமாக பார்த்தல், வெளியில் சொல்ல முடியாத காட்சிகளை பார்த்துவிட்டு, மனதிற்குள் வைத்து இருத்தல்.  எனக்கே தெரியாது தப்பு என்று தெரிந்தாலும் முடியல,  பெண்களை பார்த்தால் மார்பை பார்க்க தூண்டுகிறது. பின் பக்கம் பார்க்க தோன்றுகிறது. எனக்கே அசிங்கமா இருக்கு, ஆனாலும் முடியல வயது வித்தியாசம் இல்லாமல்  யாரையும் பார்க்கிறது கண்கள்.

தொடர்ந்து கை கால் கழுவி கொண்டு இருத்தல், மணிக்கணக்காக  குளித்தல், பல மணி நேரம் பல் விளக்குதல், கை, கால் எல்லாம் புண்ணாகிவிட்டது.  உடல் தோல் எல்லாம் வெளுத்து விட்டது.   அடுத்தவர் மலம் எப்படி இருக்கும்.  பார்க்கின்ற அடுத்தவர் எப்படி மலம் போவார்கள், அது என்ன ஆகும்.   சாப்பிடும் போது தட்டில் அருகில் மலம் இருந்தல் எப்பிடி இருக்கும்.   இவர்கள் வயிற்றில் மலம் எப்படி இருக்கும்.ஒரு பெண் எதிர்த்த வீட்டில் ஒரு பையனை அடித்து அவன் வாயில் மலம் வைத்த காட்சி பார்த்ததால்  சுமார் 50 வாருடங்களாக மனபாதிப்பில் இருக்கிறார். எத்தனை மருத்துவம் பார்த்தும் குணமாக்கமுடியவில்லை.
 
கண்ணாடி முன் நின்று கொண்டு தன்னை பார்த்து திட்டுவது. தனக்கு தானே தண்டனை கொடுத்து கொள்வது.  தன் கை, கால்களில் சூடு போட்டுகொள்வது காயம் ஏற்படுத்திகொளது.

எனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டாகள். எனக்கு என்னமோ ஆகிவிடும் போல் செத்து போய்விடுவோமோ கை கால் வராமால்  போய் விடுமோ என்ற பயம். யாராவது நோயாளிகளை பார்த்தால் தனக்கும் அந்த நோய் வந்து விடுமோ,  அதனால் நோய் கஸ்டம் ஏற்பட்டு  பாதிக்கபடுவோம் என்ற பயம். ஒரே எண்ணம் திரும்ப திரும்ப வந்து என்னால்  சாப்பிடமுடியாலை. யாரை பார்த்தலும் கோபம் கோபமா வருது, எதையாவது போட்டு உடைக்கலாம் என்று இருக்குது. கோயிலுக்கு போவதற்கு கூட போக பயமா இருக்குது.  நாம் எதாவது தப்பு செய்து விட்டோமோ அதனால் கடவுள் தண்டித்து விடுவாரோ என்று பயம்.

ஏன் எனக்கு மட்டும் கெட்டதா நடக்குது. எதிர் காலத்தை  நினைத்து பார்க்கவே பயமா இருக்குது.  மனதில் செத்து போய்விடலாம், தற்கொலை செய்து கொள்ளலாம் போல் தோனுது.

யாரையவது அடித்து துன்புறுத்தி அழவைத்து பார்க்க தோனுது.  செக்ஸ் வக்கிர மான எண்ணங்கள் மனைவி, மகள், மகன், மீது சந்தேகம்,ஹோமோ செக்ஸ், லெஸ்பியன்  எப்போதும் சுய இன்பம்   தப்பு என்று தெரியுது, ஆனாலும் விடமுடியலை.  எந்த வேலையையும் சரியாக செய்ய முடியலை. மனது மாற மறுக்குது பெண்களின் ஆடைகளை போட்டு பார்ப்பது அல்லது சுய இன்பத்தில் கூடுதலாக கிடைப்பது, எல்லா பெண்களையும் ஒரே மாதிரி பார்த்து இவர்களுடன் செக்ஸ் வைத்தால்  என்ன என்கிற வக்கிர புத்தி  வருது என்ன செய்வது என்று தெரியவில்லை.   கோயிலுக்கு போனல் கூட இந்த நினைப்பு தான், எதிரில் இருப்பவர்கள் எல்லாம் நிர்வாணமாக இருக்கிறார்கள் என்ற நினைப்பு  நினைக்கவே வெட்கமா இருக்கு.

ஆழ்மனதின் பாதிப்பால் திக்குவாய், சிறுவயதில் பார்க்க கூடாத செக்ஸ் காட்சிகள் பார்த்ததால்  பயம். புதிய நபரை பார்த்தால் திக்கி திக்கி பேசுவது மேடையில் பேச தடை,  வருட கணக்கில் இந்த நிலை. இதனால் யாருடனும் பேச முடியாத தாழ்வு மனப்பான்மை.  பக்கத்தில் இருப்பவர்கள் தன்னை பற்றி தான் பேசுகிறார்கள். தனக்கு ஏதோ சதி செய்கிறார்கள் தன்னை கொல்ல பார்க்கிறார்கள் தன்னை கேலி செய்கிறார்கள்.

உடம்பு எல்லாம் பூச்சி ஊர்வது மாதிரி, உடம்பு எல்லாம் எரிச்சல் ஏற்படுதல்.   சொரிந்து புண்ணாக மாறுதல், எல்லா விதமான மருத்துவ சோதனை செய்தாலும், எல்லாம் நன்றாக இருத்தல்.   ஆனால் நெஞ்சு படபடப்பாக இருத்தல், பயமாக இருத்தல்,  உடம்பு எல்லாம் அரித்தல், இரவிலும் தூக்கம் இல்லை, பகலிலும் தூக்கம் இல்லை. தூங்கினாலும் கடுமையான கனவு வந்து தூக்கத்தை கெடுக்கிறது. 
,
யாருக்கு மனநோய் இருக்கிறதோ அவர்களுக்கு தூக்கம் வராது யாருக்கு தூக்கம் வரவில்லையோ அவர்கள் புரண்டு புரண்டு படுத்தாலும் பகலிலும் இரவிலும் தூக்கம் வராது. அவர்களுக்கு மனநோய் வந்துவிட்டது என்று அர்த்தம்.

எந்த மருந்து மாத்திரை சாப்பிட்டாலும், எந்த பரிசோதனை செய்தாலும் சரி என்று இருக்கும் போது வரும் கை, கால் நடுக்கம், உடல் எரிச்சல், நரம்பு பிடிப்பு, ஒற்றை தலைவலி, கடுமையான வயிற்றிவலி,  இன்னும் பல நமக்கே தெரியாத மன பிரச்ச்சனையால் வரும்  நோய்கள் ஆகும்.

எயிட்ஸ் நோய் வந்தவர்களுக்கு கூட  மரியாதை உண்டு ஆனால் மன நோய் பாதித்தவர்களுக்கு மரியாதை இல்லை.   இன்றும் அவர்களின் குடும்பத்தார் கூட அவர்களை மதிப்பது  இல்லை. அவர்களை  மெண்டல் என்று திட்டுவது அடிப்பது. கை, கால்களில் சங்கிலியால் கட்டுவது தனி அறையில் போட்டு பூட்டுவது,    அதனால் அவர்கள் மனநோய் அதிகமாக காரணம், இன்றும் கிராமங்களில் மனநோய் பாதித்தவர்களை கல்லால் அடிப்பது  நடக்கிறது.
70% மனநோய்க்கு காரணம் செக்ஸ், பார்க்ககூடாத காட்சிகள் பார்த்தல், சிறு வயதில் பார்த்தல், செக்ஸ் தொடர்பு, அடுத்தவர் தன் மீது பலாத்காரம்  செய்ததால் பாதிப்பு, கல்லுரிகளில் செக்ஸ் பாதிப்பு,  ஒரு அழகான பெண்ணை கல்யாண  மண்டபத்தில் இரவில் கட்டிபிடித்ததால் அவர்களின் மனம் பாதித்தது.   தன் குழந்தைகளை இழந்து விட்டு அல்லது தற்கொலை விபத்தால்  இழந்து விட்டு அவர்களின் நினைவு தினமும் வாட்டும் போது  மறக்க முடியாதநிலை, வேதணை படுவது, கணவனை இழந்துவிட்டு அவர் நினைவாக  இரவில் மனதில் வந்து தூக்கம் கெடுப்பது, மனரீதியாக உடல் ரீதியாக துன்புறுவது.
 
காதலித்த பெண்னை பிரிவது, அவள் நினைவாகவே இருத்தல், வேலை செய்ய முடியாதநிலை, தற்கொலை செய்ய மனம் துடித்தல்,  இதனால் அடுத்த வாழ்க்கை தேட முடியவில்லை மனபாதிப்பு ஏற்பட்டவர்கள் தனிமையில் வெறித்து பார்த்து இருப்பார்கள் யாருடனும் பேசாத நிலை,  தனிமையில் தேடி போவார்கள்.  எந்த வேலையிலும் ஈடுபாடு இருக்காது, ஆர்வம் இருக்காது,, கவனம் இருக்காது,  தேவையின்றி கோபம் வரும், என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுவார்கள். வெறித்தபடி கத்துவார்கள்.

தூரத்தில் யாராவது நின்று பேசினால் அவர் தன்னை தான் பேசுகிறார் தன்னை கொலை செய்ய  சதி செய்கிறார்.  சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்ல பார்க்கிறார்கள்.  படிப்பில் கவனம் இல்லாமல் துரு துரு என்று இருக்கும் மாணவர்கள்.  எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் சோம்பேரி மாணவர்கள், படித்தது மறந்து போகும் மாணவர்கள், படிக்க விருப்பமில்லாத மாணவர்கள்,   இவர்களை ஹிப்னாடிசம் மூலம் மாற்றலாம்.

குழந்தைகளை பார்த்து திட்டும் போது சரியான மக்கு, கருப்பு அழகு இல்லாதவன், உனக்கு ஒன்னும் தெரியாது,  நீ மக்கு  போன்று திட்டுதல்  மனநோய்க்கு மாணவர்களுக்கு ஒரு காரணம் ஆகும். சிறிய வயது பெண் குழந்தைகளுக்கு கற்பழிப்பு முயற்சி அல்லது செயல் போன்றவை, எதிர்கால மனபாதிப்பு ஆகும். பார்க்ககூடாத காட்சிகளை பார்த்தல், அல்லது சிறிய வயதில் செக்ஸ் சம்பந்தமான  டிவி, படங்கள் பார்த்தல், பெற்றோர்கள் செக்ஸ்ல் இருக்கும் போது தெரியாமல் பார்த்தல்,  சில செக்ஸ் வக்கிரமான காட்சியை எதிர்பாராமல் பார்த்தல்,  அந்த காட்சிகளை மறக்க முடியாமல்  மனதிற்குள் தவித்தல். அதை பார்த்து செக்ஸ்ல் ஈடுபடுவது.

குழந்தைகள் மீது விளையாட்டாக கரப்பான் பூச்சி  தேள் நாய் பூரான் போன்ற விளையாட்டு பொருட்களை போட்டு விளையாடுதல் அதனால் ஏற்படும் பயம் வாழ்க்கையில் பின் நாளில் மனநோயாக மாறுவது.

மனநோய் பாதிக்கபட்டவர்கள்  தான் மற்றவர்களிடம் மனம் விட்டு பேசினால் அவர்கள் பிரச்சனை பாதியாகும். ஆனால் அவர்களால் யாரிடமும் பேச முடியாது. அதனால் தான் புதிதாக ஒரு நபரை பார்த்து மருத்துவரை பார்த்து சொல்ல முயல்கின்றார்கள் ஆலோசனை கேட்கிறார்கள் தன் உறவினர்களிடம் சொன்னால் எதிர்காலத்தில் எங்கே தன்னை பற்றி மோசமாக மற்றவர்களிடம் சொல்லி அவமானபடுத்தி விடுவார்கள்  என்று பயந்து சொல்லமாட்டார்கள். அது போல் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களும் தன் மனவேதனை பிரச்சனைகளை சொன்னால் அந்த பிரச்சனைகளில் இருந்து  ஓரளவு பாதிப்பில் இருந்து  வெளியே வந்துவிடுவார்கள்.

மரம் அமைதியாய்  இருக்க விரும்பினாலும்  காற்று சும்மா இருக்க விடாது  

திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டியில் PARA  சைக்காலஜி முறையில் ஆன்மீக சக்தியில் மனநோய்   குணமாகின்றது. மனநோய் பாதித்தவர்கள் அந்த கோயிலில் வந்து 45 நாட்கள் ஒரு மண்டலம் தங்கி இருந்து,  தினமும் அங்கு உள்ள கோயில் கிணற்றில்  நீர் எடுத்து  அதாவது புனித தீர்த்தம் அந்த நபரின் மீது ஊற்றுவார்கள் தொடந்து பல குடம் தண்ணீர் ஊற்றிய பிறகு அந்த ஈரமான உடையுடன் கோயிலை சுற்றி வந்து அங்குள்ள இறைவனை வணங்கி வரவேண்டும். தினமும் காலை மாலை இரண்டு வேளையும் இது போல் வந்து ஈர உடையுடன் சாமி கும்பிட வேண்டும். அந்த கோயிலின் சக்தியால், கை, கால்களில் சங்கிலிகள் இனைத்து கட்டிய நிலையில் வருவார்கள், சிலர் கைகளில் விலங்கு போட்டு இருப்பார்கள். அவர்களுக்கு கூட மனநோய் சரியாகின்றது. எல்லாம் இறைவன் மீது உள்ள பக்தியால் நம்பிக்கையால் மட்டுமே சாத்தியமாகின்றது.
இன்னும் எழுதினால் எழுதிகொண்டே இருக்கலாம் நிற்க



No comments:

Post a Comment