பகுதி 15
தனிமை வாழ்கை:
மதுரையில்
இருந்து ஒரு நபர் என்னிடம் சிகிச்சை காரணமாக வந்த போது அவருக்கு
முன்ஜென்ம நிகழ்வுகள் அறியமுயன்ற போது
அவரை ஆழ்ந்த
தூக்க நிலைக்கு செல்ல
வைத்து அவர்
ஆழ்மனதோடு பேசியபோது அவர்
மனைவி இறந்து 10 வருடங்களாகிவிட்டது அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார் என்றும்
சொன்னார். அவருக்கு
1 பெண், 1 பையன் உள்ளதாகவும் தற்போது
குழந்தைகள் தன்
தாத்தா, பாட்டியின் பாதுகாப்பில்
இருப்பதாகவும், தான் தனியாக திருப்பூரில் தங்கி வேலை
செய்வதாகவும் தெரிவித்தார் . இனி எதிர்காலத்தில்
தான் திருமணம் செய்வதுஇல்லை என்றும்,
இனி தனிமையேவாழ்க்கை என்றார் அந்த
நபரோடு ஆழ்மனதில் பேசியபோது அவர் போன ஜென்மத்தில்
ஒரு புறாவாக கோயில்
கோபுரத்தில் இருப்பதாக கூறினார், தான்
இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருப்பதாகவும்
தன்னுடைய துணை வெளியே சென்று விட்டதாகவும் அதற்காக தான் காத்துகொண்டு
இருப்பதாகவும் சொன்னார். தன் துணை
உணவு கொண்டு வரும் என்று துணைக்காக காத்துகொண்டு இருப்பதால் உணவுகூட சாப்பிடாமல் இருப்பதாகவும் சொன்னார். பலநாட்கள்
காத்து இருந்தும் தன் துணை
வரவில்லை. தன் துணை எப்படியும் வரும் என
காத்திருப்பதாகவும் என்றும்
கூறினார். தன்
துணை வெளியே
சென்றது திரும்பிவராமல் தனிமையில் வாடுவதாகவும் சொன்னார்.
தான் கடைசிவரை
தன் துணை வரவேயில்லை என்றார். போன
ஜென்மத்தில் நடந்த
நிகழ்வு இந்த ஜென்மத்தில் மனைவி இறந்து தனிமையில் வாழ்கை
நடத்திவருதற்கும் உள்ள
தொடர்பு மிக சரியாக உள்ளது. மேலும் அதற்கும் முன்ஜென்ம
நிகழ்வுக்கு சென்ற போது அவர் ஒரு
கழுகாக திருவண்ணாமலை பகுதியில்
மலை மீது
அமர்ந்து இருப்பதாகசொன்னார். இறைவனை
நோக்கி தவம்
செய்வதாகவும் தனக்கு துணையாக யாரும்இல்லை, தனியாக இருந்து
தவம் செய்வதாகவும் சொன்னார். தான் சிவபெருமானை நேரில்
பார்ததாகவும், இனி தான் சிவன்அருளால் சொர்க்கம்
சென்று விடுவேன் என்றார்
அவர் இனி திருமணம் செய்யாமல்
ஆன்மீகத்தில் இருப்பதாகவும்
சொன்னார். அவர்
போன ஜென்மத்தில் கோயில் கோபுரத்தில் தன்
துணைக்காக காத்திருந்ததும் அடுத்த
ஜென்மத்திலும் தனக்கு துணை இல்லாமல், கோயிலில்
தவம் செய்துவந்தது இப்போது அவர்
வாழ்க்கையும் மிகவும்
சரியாக பொருந்திவருவதும் முன்
ஜென்மநிகழ்வு தொடர்ந்து
வருவதும் உண்மையாக நிருபிக்கபட்டது.
அடுத்த முறை
வரும் போது தங்களுக்கு திருமணம்
பற்றி தகவல் பதிவுசெய்ய வர சொன்ன போது மறுத்து விட்டார். திரும்பவும்
அவர் வரவில்லை.
இனி தான் திருமணம் செய்வது இல்லை என்றும் தனக்கு பக்தி அதிகமாக இருப்பதால் தான் ஆன்மீகத்தில் வாழ்க்கை தொடர்வதாகவும் சொன்னார்..
No comments:
Post a Comment