பகுதி 3
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம்
மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :
மரணத்தை தள்ளிபோட கூடிய
சக்தி அது என்ன ?
ஒரு வீட்டில் பகல்
12 மணி 25 வயது வாலிபர் மதியம் டீவி பார்த்துகொண்டு இருந்தார். சரியாக 1 மணிக்கு அவர்
இறக்க வேண்டும் என்பது அவருடைய விதி. அதாவது பிரம்மாவின் தலையெழுத்து. எப்படியாவது
அவர் இறந்துவிடுவார். அன்று அவரது பள்ளிகால
தோழன் வந்து அவரிடம் பேசிவிட்டு நாம் இருவரும் வெளியில் செல்வோம் நீண்ட நாள் ஆகிவிட்டது
என்று சொல்லி வெளியே அழைத்து சென்றார். அவர் சென்ற 30 நிமிடத்தில் லாரியில் அடிபட்டு
சம்பவ இடத்தில் இறந்துவிட்டார். விதி அவரை அவரது நண்பர் ரூபத்தில் வந்து அழைத்து சென்றுவிட்டது
என்று சொன்னார்கள். அந்த நண்பர் தன்னுடைய மரணத்தை
எப்படி தள்ளி போட்டிருக்கலாம் அதாவது விதியை எப்படி மதியால் வென்று இருக்கலாம் முடியாது
கருவில் உருவான பதிவுகளை கடவுளால் கூட மாற்ற முடியாது அதாவது தலையெழுத்தை மாற்ற முடியாது.
ஆனால் ஒரு ஹிப்னாடிஸ்டால் அதையும் மாற்ற முடியும். ஒருவரின் ஆழ்மனதில் என்ன பதிவு உள்ளதோ அதுவே ஒருவரின்
எதிர்காலம் ஆகும். அதை மாற்றமுடியாது ஆனால் அவரின் ஆழ்மனதில் நாம் புதிய வாழ்க்கையை
பதிவு செய்தால் அதன் படி அதுவாகவே மாறிவிடும் என்பதாகும். அதன் படி அந்த நபரின் ஆழ்மனதில்
இன்னும் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வாய் என்று பதிவு செய்தால் அவர் மரணம் தள்ளிபோடபட்டிருக்கும்.
அதற்கு அவர் ஒன்று சரியான ஹிப்னாடிசம் சிகிச்சை செய்பவரின் சென்று சிகிச்சை பெற்று
இருக்க வேண்டும் அல்லது அவர் தன்னுடைய ஆழ்மனதை சரியான பயிற்சியால் அடைந்து அதில் எதிர்காலத்தில்
எப்படி இருக்க வேண்டும் என்று பதிவு செய்தால் அதன் படி அவர் வாழ்க்கை அமைந்துவிடும்
வெற்றி அடைந்துவிடும். அப்படியே நிம்மதி என்றால்
என்ன என்று பார்க்கலாம் யாராவது நிம்மதியாய் இருக்கிறீர்களா ? என்று கேட்டால் அடுத்த
பகுதியில்
No comments:
Post a Comment