Tuesday 12 May 2015

சாப்பிடும் போது கவனிக்கபட வேண்டியவைகள்

1 காலையில் நன்கு சத்தான உணவு வயிறு நிறைய சாப்பிடவேண்டும்
2 மதியம் 3/4 பங்கு மட்டுமே சாப்பிடவேண்டும்.
3 இரவு ½ அல்லது மிதமான உணவு மட்டுமே சாப்பிடவேண்டும்.
4 சாப்பிட்ட பின் உடன்படுத்து தூங்ககூடாது. சிறுது ஓய்வு எடுக்கவேண்டும்.
5 காலையில் கிழக்கு மாலையில் மேற்கு நேக்கி சாப்பிட வேண்டும். வடக்கு நோக்கி சாப்பிடுதல் தவிர்க்க வேண்டும்.
6 நன்கு பசித்த பின் உணவு எடுக்கவேண்டும். ( To live long and Health to eat only when you Hungery)
7 நன்கு அமர்ந்து வசதியாக உட்கார்ந்து சாப்பிடுதல் நலம்.
8 நின்று சாப்பிடுவது தவிர்க்கவேண்டும்.
9 சாப்பிடும் போது வேறு சிந்தனை கூடாது.
10 உணவை ருசித்து மென்று சாப்பிடவேண்டும்.
11 கவலையாக இருக்கும் போது சாப்பிடக்கூடாது, சாப்பிட முடியாது.
12 வேலை செய்து கொண்டு சாப்பிடக்கூடாது.
13 டீவி, செய்திதாள் பார்த்துகொண்டு சாப்பிடக்கூடாது.
14 வேகமாக சாப்பிடக்கூடாது.
15 ஆறிப்போன உணவை சுடுபடுத்தி சாப்பிடகூடாது.
16 சாப்பிடும் போது நாக்கை வெளியே நீட்டி கொண்டு சாப்பிடகூடாது.
17 குழந்தைகளுக்கு சாப்பாடு எப்படி ஊட்டி கொடுக்கிறேமோ அது போல் நாமும் நமக்கு நாமே ஊட்டி கொள்ளவேண்டும்.
18    என்ன சாப்பிடுவது               எதை சாப்பிடுவது
      எப்படி சாப்பிடுவது              எவ்வளவு சாப்பிடுவது
      எப்ப சாப்பிடுவது               எங்கே சாப்பிடுவது.
19 சாப்பிடும் போது ஆள்காட்டி விரல் நீட்டி கொண்டு சாப்பிடகூடாது.
20 சாப்பிடும் போது முன்பு அல்லது சாப்பிடும் போதும் முடிந்த வரை நீர் அருந்துவதை தவிர்க்கவேண்டும்.
21 சாப்பிட்ட பின் சுமார் 10 நிமிடம் கழித்து நீர் அருந்த வேண்டும்.
22 சாப்பிடும் போது உணவு உதட்டில் பட்டு வாயில் உள்ளே வைத்து சாப்பிடவேண்டும்.
23 சாப்பிடும் போது உணவு நன்கு கூழ் போல் ஆகுமாறு அளவிற்கு சாப்பிடவேண்டும்.
24 உணவை வாயில் வைத்தபிறகு வாயை நன்கு மூடிக்கொண்டு சாப்பிடவேண்டும்.
25 உணவை வாயில் வைத்து கண்களை மூடிக்கொண்டு சாப்பிட்டால் நமது கவனம் முழுமையாக சாப்பாட்டில் இருக்கும்.
26 எண்னைய்யில் பொரித்த உணவுகள் தவிர்க்கவேண்டும்.
27 வேகவைத்த, ஆவியில் வேகவைத்த உணவுகள் நல்லது.
28 உணவுடன் காய்கள் சேர்த்து கொள்ளவேண்டும்.
29 சாப்பிட்டவுடன் பழச்சாறு அல்லது பழங்கள் சாப்பிடுவது நல்லது.
30 ருசியாக இருக்கிறது என்பதற்காக அதிகமாக உணவு எடுத்து கொண்டால் பல நேரம் பட்டினியாக கிடக்கவேண்டி வரும்.
31 வயிறு என்பது செத்தவைகளை புதைக்கும் சுடுகாடு அல்ல.
32 சைவ உணவுகள் புற்று நோய்க்கு உகந்தது ஆகும்.
33 காய்களில்  கீரைகளில் நார்சத்து அதிகமாக உள்ளது
34 பழங்கள் , காய்களில் நல்ல அதிகமான நிறமுள்ளவைகள் நமது உடலுக்கு நல்லது,
35 தேவையான அளவு மட்டுமே நீர் அருந்தவேண்டும் அத்துடன் காபி, டீ,   ,   ,சாம்பார், ரசம் பழச்சாறு போன்றவைகலில் நீர் உள்ளது.
36 அதிகபடியான நீர் அருந்தும் போது சிறுநீரகம் பாதிக்கும். கழிவுகள் உடலில் சேர்ந்து வீக்கம் ஏற்படும்.
37 Charged water Copper water, Silver water, Gold water உடலுக்கு மிகவும் நல்லது.
38 Green Juice எனப்படும் கிரைகளில் இருந்து எடுக்கபடும் சாறு உடம்புக்கு நல்லது.
39 குளிர்ச்சியான சூடான உணவுகள் சேர்த்து சாப்பிட கூடாது.
40 சாப்பிடும் போது 5 வகையான சுவைகள் இனிப்பு, காரம், புளிப்பு, கசப்பு, உப்பு இருக்குமாறு சாப்பிடவேண்டும்.
41 அதிகமான புளிப்பு சுவை உள்ள உணவுகள் தவிர்க்க வேண்டும்.
42 பழங்கள் இயற்கையகவே புளிப்பு சுவை உள்ளது.
43 பாக்கெட்களில், டின்களில் அடைத்த உணவு தவிர்க்கவேண்டும்.
44 புகை, மது போதை பழக்கம்கூடாது.
45 கை பதனம்,   வாய் பதனம்,   பிரசாதபதி கவனம்.
46 உடம்புக்கு ஒவ்வாமை தரும் உணவுகள் சாப்பிடகூடாது.
47 நாம் சாப்பிடும் உணவுகளில் முடிந்த அளவு வெண்மை நிறம் தவிர்க்கவேண்டும். (மருந்து, சர்க்கரை, உப்பு, பால், அரிசி).
48 மாவு போன்ற உணவுகள் அதிகம் எடுத்து கொள்ளக்கூடாது
49 சில பொண்மொழிகள்
  மாவு பொருள் உண்டால் உடலுக்கு வரும் நோவு
  ஆயில் குறைத்தால் ஆயுள் அதிகமாகும்
  புகை உடம்புக்கு பகை
  பழம் உடம்புக்கு எப்பவும் பலம்
  உப்பு உடலுக்கு ரொம்ப தப்பு


50 இயற்கையை நேசியுங்கள் இயற்கையோடு ஒன்றினைந்து இயற்கையாக வாழுங்கள்.
51 காரம்                     நுரையீரல்
   இனிப்பு                   வயிறு
   கசப்பு                     இதயம்
   புளுப்பு                    கல்லீரல்
   உப்பு                      சிறுநீரகம்
இந்த சுவைகள் அதிகமானாலும் பாதிக்கும், குறைந்தாலும் இந்த உறுப்புகள் பாதிக்கும்.


52 உடலுக்காக உணவு   உணவுக்காக உடல் அல்ல.

சாப்பிடும் முறை:
என்ன உணவு எப்போது சாப்பிட்டாலும் எப்படி எந்த முறையில் சாப்பிடுகிறோம் என்பது மிகமுக்கியம்.
முதலில் உணவின் முன்னால் அமர்ந்து கொண்டு மானசிகமாக சில நொடிகள் /றைவனுக்கு நன்றி சொல்லி விட்டு அதாவது எனக்கு இந்த உணவை கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி இந்த உணவு சாப்பிட்டபின் அது சதையகவும் ரத்தமாகவும் மாறி நான் உயிர் வாழ உதவிய இறைவனுக்கு நன்றி என்று சொல்லிகொண்டு சிறிதளவு உணவை நாம் சாப்பிடும் இலை ஓரத்தில் எடுத்து வைத்து விட்டு முதலில் சிறிது இனிப்பு சாப்பிடவேண்டும்.. அந்த இனிப்பு உதட்டில் பட்டதும் உதடு வயிற்றுக்கு தகவல் தெரிவித்து இப்போது நல்ல சத்தான உணவு வருகிறது தயாராக இருக்கவும் என்று உதடு வயிற்றுக்கு தகவல் சொல்லிவிடும். பிறகு வயிறு ஜீரணம் ஆவதற்கான ஜீரண நீர் உடன் சுரக்க ஆரம்பிக்கும். பிறகு சிறிதாக சாதத்தை (உணவை) கையில் எடுத்து வாயை அதிகம் திறக்காமல் நாக்கை வெளியே நீட்டாமல் வைத்து கொண்டு உதடுகளில் உணவு படுமாறு வாயில் உணவை வைத்து பிறகு வாயை நன்கு மூடிக்கொண்டு (காற்று உள்ளே செல்லாமல்)நன்கு மென்று அறைத்து உண்ண வேண்டும். அப்போது உணவு நன்கு கூழ் போன்ற நிலையை அடையும். வரை முழுங்கமுடியாது. வாயை திறந்தால் மட்டுமே உணவு வாயில் இருந்து உணவுக்குழாய் செல்லும். வாயை மூடிய நிலையில் நன்கு கூழ் போன்ற நிலை ஆகும் போது மட்டுமே உணவுகுழாய் வழியாக உணவு வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் சென்ற உணவு விரைவில் நன்கு ஜீரணமாகும்வாயில் உணவு மெல்லும் போது உணவில் உள்ள ருசிகள் நாக்கின் வழியாக இருதயத்திற்கு சென்று உடனடியாக அந்த  அந்த சுவைகள் ரத்தம் மூலம் அந்த அந்த உறுப்புகளுக்கு உடன் செல்கிறது.
ஆனால் சாப்பிட்ட சில நேரம் கழித்தே அந்த உணவில் இருந்து சிறுகுடல் முலம் சக்தி உறுஞ்சபட்டு ரத்தமாக மாறி ஒவ்வொரு உறுப்புக்கும்

தேவையான சத்துக்கள் சென்று அடைகிறது. சுமார் 40 கிலோ உணவு  பொருளில் இருந்து சுமார் 1 லிட்டர் ரத்தம் உருவாக காரணமாகிறது. புதிய ரத்தம் உருவாகும் போது பழைய ரத்த அணுக்கள் இறந்து மலமாகவும், சிறுநீராகவும், வெளியேறுகிறது. புதிய ரத்தம் எந்த அளவு அதிகமாக  உருவகிறதோ அந்த அளவிற்கு நமது உடலில் நோய் தன்மைகள் தாக்காதவாறு பாதுகாக்கபடுகிறது. அதனால் தான் சத்தான உணவுகள் சாப்பிட எல்லா மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். இயற்கையான பழங்கள், காய்கறிகள், கீறைகள், தானியங்கள், போன்றவைகளில் கிடைக்கும் இயற்கை சத்துக்கள் எந்த விதமான  சத்துக்கும் இனை கிடையாது. ஆகவே இயற்கையை நேசிப்போம், இயற்கையாக வாழ்வோம்.

நீர் அருந்தும் முறை:
நமது உடப்பிற்கு தேவையான நீர் இறைவன் நமது உடப்பில் பல இடங்களில் ஊற்று போல் இயற்கையாக நாளமில்லா சுரப்பிகள் வயிற்றில் ஜீரண நீர் போன்றவை உள்ளது. இந்த நீர்கள் நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆவதற்கும் மற்றும் ரத்ததில் உள்ள நீர்தன்மை வெளி பகுதியில் உள்ள வெப்பத்தால் தோல் பகுதிவெப்பமடைந்து வேர்வைதுளைகள் வழியாக வெளியேறுகிறது. அந்த வெளியேறும் வியர்வை சரி படுத்ததான் நாம் நீர் அருந்த வேண்டி இருக்கிறது. ஆகவே நமது தேவைகள் என்ன என்பது ஒவ்வோருவருக்கும் தனிப்பட்ட உடம்பில் தேவையான அளவு போதுமானது.. அந்த அளவு அடுத்தவர் (டாக்டர்) நிர்ணனயக்கமுடியாது. எந்த அளவு நிர் அதிகமாக குடிக்கும் போது சிறுநீரகம் சோர்ந்து போய் ரத்ததில் உள்ள அதிகமான நீர்தன்மையை பிரிக்க முடியாமல் போகிறது. அப்போது அதிகமாக சேர்ந்த நீர்தன்மை கழிவுகளாக மாறி உடலின் கீழ்பகுதியில் அதாவது இடுப்புக்கு கீழ் பகுதியில் தேங்க ஆரம்பிக்கிறது.. தேவையற்ற ஊளைசதையாக மாறி உடல் பருமன் ஆகிறது. முட்டிகால் வலி கடுமையாக மாறுகிறது. ஆகவே தேவைகேற்ற வகையில் நீர் அருந்தவேண்டும். ஒரு நபர் ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் குடிப்பதாக வைத்து கொண்டால் ஒரு நாளைக்கு சிறுநீராக சுமார்1.250 லிட்டர், ஜீரணத்திற்கு, வியர்வையாக சுமார் 1 லிட்டர் பயன்படுகிறது. பயன் படுத்தியது போக சுமார் .750 லிட்டர் நீர் கழிவு ஆக உடலில் தங்கிவிடுகிறது. இது போல் தொடர்ந்து கழிவுகள் தங்கும் போது உடல் பருமன் ஆதிகமாகிறது. அதனால் தான் நன்கு உடற்பயிற்சி செய்து உடலில் வியர்வைவெளியேற்ற வேண்டும்..

தண்ணீர் குடிப்பது என்பது வேகமாக தொடர்ந்து குடிக்ககூடாது கொஞ்சமாக நீர் எடுத்து கொண்டு வாய் பகுதியில் பாதி அளவே எடுத்துகொண்டு முதலில் கீழ் உதடுகளை வாயின் உற்பகுதிற்கு கொண்டு சென்று நாக்கால் ஈரப்படுத்த வேண்டும். பிறகு மேல் உதடுகளை உள்ளே கொண்டு சென்று நாக்கால் ஈரப்படுத்தவேண்டும்.. பிறகு வாயில் இருபக்கங்களிலும் கொண்டு வந்து இரண்டு அல்லது முன்று முறை நன்கு கொப்பளிக்கவேண்டும். இப்போது அந்த நீர் முழுமையாக எச்சிலாக அதாவது உமில்நீராக மாறி இருக்கும். இப்போது மெதுவாக முழுங்கவேண்டும். இப்படி கால் டம்ளர் நீர் குடித்தால் உடம்புக்கு தேவையான நீர் குடித்ததாக தோன்றும். இந்த நீர் உடம்புக்கு முழுமையாக பயன்படும். இவ்வாறு இல்லாமல் மொத்தமாக குடிக்கும் போது நீரின் அளவில் சுமார்முதல் 10% மட்டுமே நமது உடலுக்கு பயன்படுகிறதுநீர் குடிப்பது மட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் போது உணவில் ரசம், சாம்பார், மோர், காபி, டீ, மற்றும் பழரசம். போன்றவைகள் நீர்த்தன்மை உள்ளது. நமது உடபில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது. உலகத்தில் பரப்பில் 2/3 தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment