Tuesday 26 May 2015

என்ன பாபம் செய்தேன் இறைவா !


கொஞ்சம் பெரியது தான் படித்து பாருங்கள் 
மனுமுறைகண்ட வாசகம்.(படித்து பாருங்கள் விளக்கம் புரியும்)

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ  !
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ  !
வலிய வழக்கிட்டு மானம் கெடுத்தேனோ  !
வரவு போக்கு ஒழியவழி அடைத்தேனோ  !
தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ  !
தருமம் பாராது தண்டம் செய்தேனோ  !
கலந்த சிநேகரைக் கலகம் செய்தேனோ  !
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ  !
மன ஒத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ  !
மண்ணோரம் பேசி வாழ்வு அழித்தேனோ  !
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ  !
குடிக்கின்ற நீருள்ளக் குளத்தைத் தூர்த்தேனோ  !
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ  !
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ  !
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ  !
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ  !
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ  !
பொது மண்டபத்தை போயிடித்தேனோ  !
ஆசை காட்டி போசஞ் செய்தேனோ  !
அன்புடையவர்க்கு துன்பம் செய்தேனோ   !
வேலையிட்டுக் கூலிகுறைத்தேனோ  !
வெய்யிலுக் கொதுங்கும் விருட்சத்தை அழித்தேனோ  !
பசித்தோர் முகத்தை பாரா திருந்தேனோ  !
பகை கொண்டு அயலோர் பயிரை அழித்தேனோ  !
கோள் சொல்லிக் குடும்பம் அலைத்தேனோ  !
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ  !
கற்பிழந்தவளைக் கலந் திருந்தேனோ  !
கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ  !
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ  !
கருப்பம் அழித்துக் களித் திருந்தேனோ  !
கற்றவர் தம்மைக் கடு கடுத்தேனோ  !
கன்றுக்குப் பாலுட்டாது கட்டி வைத்தேனோ  !
குருவை வணங்கக் கூசி நின்றேனோ  !
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ  !
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ  !

பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ  !
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ  !
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ  !
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ  !
சிவனடியாரைச் சீறி வைதேனோ  !
சுத்த ஞானிகளைத் தூஷணம் நடந்தேனோ  !
தந்தைதாய் மொழியை தள்ளி நடந்தேனோ  !
தெய்வத்தை இகழ்ந்து செருக்கைடைந்தேனோ  !
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்று அறியேனே
ஒருவன் நான் மேலுள்ள எந்த பாவமும் செய்யாத போது எனக்கு ஏன் இந்த கஸ்டம் வந்தது என்று மன உருக பாடும் பாடல். 

  

No comments:

Post a Comment